MAP

புதிய அருளாளர்களான பேராயர் எதுவார்தோ மற்றும் மரிய மதலேனா

கடவுள் போரை ஒருபோதும் விரும்பவில்லை, மாறாக அவர் அமைதியை விரும்புகிறார். வெறுப்பின் சுழலை விட்டுவிட்டு உரையாடலின் பாதையை எடுக்க உறுதிபூண்டவர்களை அவர் பலப்படுத்துகிறார். - திருத்தந்தை பதினான்காம் லியோ

மெரினா ராஜ் - வத்திக்கான்

அருளாளர்கள் பேராயர் எதுவார்தோ மற்றும் மரிய மதலேனா ஆகிய இருவரும் நற்செய்தியின் அழகுக்கு துணிச்சலான சாட்சிகளாகத் திகழ்கின்றார்கள் என்றும் இத்தகைய இரண்டு மறைசாட்சிகளை திருஅவைக்கு அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை

செப்டம்பர் 7, ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற புனிதர் பட்ட திருப்பலியில் பங்கேற்ற மக்களுக்கு அதன் நிறைவில் வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இக்கொண்டாட்டத்தை நிறைவேற்றுவதற்காக வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி வாழ்த்தினார்.

செப்டம்பர் 6, சனிக்கிழமை திருஅவை இரண்டு அருளாளர்களைப் பெற்றுள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒருவர் எஸ்தோனியாவின் தாலினைச் சார்ந்தவரும் இயேசு சபையைச் சார்ந்தவருமான பேராயர் எதுவார்தோ (Edoardo Profittlich) மற்றும் ஹங்கேரியின் மரிய மதலேனா (Maria Maddalena Bódi_ ஆகிய இருவரும் நற்செய்தியின் அழகுக்கு துணிச்சலான சாட்சிகளாகத் திகழ்கின்றார்கள் என்றும் கூறினார்.

பேராயர் எதுவார்தோ 1942-ஆம் ஆண்டு சோவியத் ஆட்சி திருஅவையைத் துன்புறுத்தியபோது மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார் என்றும், ஹங்கேரியின் வெர்ஸ்ப்ரெமில், இருந்த இளம்பெண் மரியா மடலேனா போடி தன்னைத் தாக்க நினைத்த வீரர்களை எதிர்த்ததற்காக அவர் 1945-ஆம் ஆண்டு கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

புனித பூமி, உக்ரைன் மற்றும் போரால் கறை படிந்த மற்ற எல்லா நிலங்களிலும், அமைதிக்காக இடைவிடாது செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும், மனசாட்சியின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

மரணத்தையும் அழிவையும் விதைக்கின்ற, ஆயுதங்களால் அடையப்படும் வெளிப்படையான வெற்றிகள் உண்மையில் தோல்விகள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அவை ஒருபோதும் அமைதியையோ பாதுகாப்பையோ கொண்டு வராது என்றும் கூறினார்.

கடவுள் போரை ஒருபோதும் விரும்பவில்லை, மாறாக அவர் அமைதியை விரும்புகிறார் என்றும், வெறுப்பின் சுழலை விட்டுவிட்டு உரையாடலின் பாதையை எடுக்க உறுதிபூண்டவர்களை அவர் பலப்படுத்துகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 செப்டம்பர் 2025, 13:59

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >