MAP

மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து  

மதுரை உயர் மறைமாவட்டத்திற்குப் புதிய பேராயர் நியமனம்

1960- ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள வடக்கு வண்டானத்தில் பிறந்தவர் ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து.

மெரினா ராஜ் – வத்திக்கான்

தமிழ்நாட்டின் மதுரை உயர்மறைமாவட்டப் பேராயராக ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து  அவர்களை ஜூலை 5, சனிக்கிழமை நியமனம் செய்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

தற்போது பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயராகவும், மதுரை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும் இருக்கும் ஆயர் அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களை மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமித்துள்ளார் திருத்தந்தை 14-ஆம் லியோ.

பேராயர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள், 1960- ஆம் ஆண்டு டிசம்பர் 8 அன்று, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் உள்ள வடக்கு வண்டானத்தில் பிறந்தவர்.

மதுரையிலுள்ள அருள்பணித்துவ இளம்நிலை பயிற்சி இல்லத்தில் சேர்ந்து, பின்னர், பெங்களூருவில், மெய்யியல் மற்றும் இறையியலை பயின்றார்.

1987-ஆம் ஆண்டு ஏப்ரல் 26, அன்று, பாளையங்கோட்டை மறைமாவட்ட அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்ட ஆயர் அவர்கள், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில், திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்றார்.

மதுரை, மற்றும் பெங்களூரு அருள்பணித்துவ பயிற்சி இல்லங்களில் விரிவுரையாளராகவும், அதிபராகவும் பணியாற்றிய ஆயர் அந்தோனிசாமி அவர்கள், 2004-ஆம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளராகவும் பணியாற்றினார்.

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயராக 2000 -ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை பணியாற்றிய ஆயர் ஜூடு ஜெரால்ட் பால்ராஜ் அவர்கள், 2018ம் ஆண்டு, ஜூன் 29ம் நாள் பணிஓய்வு பெற்றதற்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் 2019ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று அம்மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார் ஆயர் அந்தோணிசாமி.

2024 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மதுரை உயர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்ட ஆயர் அந்தோனிசாமி அவர்கள் தற்போது திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் மதுரை உயர் மறைமாவட்டப் பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 ஜூலை 2025, 12:54