MAP

திருஅவையை வழிநடத்தும் உண்மை ஆயனாம் இயேசு

திருஅவையை தனது தூய ஆவியின் வல்லமையினால் வழிநடத்தி வரும் நல்லாயனாம் இயேசுவின் ஞாயிறை சிறப்பிக்கும் அனைவருக்கும், குறிப்பாக வத்திக்கான் வளாகத்தில் கூடியிருக்கும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படும் இந்த  பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் வாயிலாக இயேசு தனது ஆடுகளை அறிந்து அன்பு செய்கின்றார், அவைகளுக்காகத் தனது உயிரைக் கொடுக்கின்றார் உண்மையான ஆயனாகத் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்று கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.     

மே 11, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் மேல் மாடத்தில் நின்று தனது முதல் பாஸ்கா கால மூவேளை செப உரையினை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த இலட்சக் கணக்கான இறைமக்களுக்கு வழங்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14ஆம் லியோ.

இறையழைத்தலுக்கான 62-ஆவது உலக நாளினை சிறப்பிக்கும் இந்நாளில், இன்னிசைக் கலைஞர்கள் தங்களது யூபிலியினை சிறப்பிக்கின்றனர் என்று நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், திருஅவையை தனது தூய ஆவியின் வல்லமையினால் வழிநடத்தி வரும் நல்லாயனாம் இயேசுவின் ஞாயிறை சிறப்பிக்கும் அனைவருக்கும், குறிப்பாக வத்திக்கான் வளாகத்தில் கூடியிருக்கும் அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களை எடுத்துரைத்தார்.

குருத்துவம் மற்றும் துறவற வாழ்விற்கான இறையழைத்தல் பெருக அனைத்து மக்களுடனும் இணைந்து செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், திருஅவை பணியாற்ற இறையழைத்தல் மிக முக்கியமானது தேவையானது என்றும், இளையோர் தங்களது தலத்திருஅவைகளில் வரவேற்றலையும், இறையழைத்தலுக்கான பாதையைத் துணிவுடன் தேர்ந்தெடுத்தலையும் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.     

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மே 2025, 16:06

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >