MAP

அரசர் தாவீதிடம் கடவுளின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் நாத்தான் அரசர் தாவீதிடம் கடவுளின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் நாத்தான் 

தடம் தந்த தகைமை – அரசர் தாவீதுக்கு கடவுளின் வாக்கு

உன் வாழ்நாள் முடிந்து உன் மூதாதையரோடு நீ சேர்ந்து கொள்ளும்பொழுது, உன் வழித்தோன்றல்களுள் உன் புதல்வர்களுள் ஒருவனை எழுப்பி அவனது அரசை நிலை நாட்டுவேன். அவன் எனக்குக் கோவில் கட்டுவான்; அவன் அரியணையை என்றென்றும் நிலைபெறச் செய்வேன்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அரசர் தாவீதுக்குக் கூற வேண்டிய கருத்துக்களாக ஆண்டவர் நாத்தானிடம் எடுத்துரைத்தது. ஆண்டவர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று அறிவிக்கிறேன். உன் வாழ்நாள் முடிந்து உன் மூதாதையரோடு நீ சேர்ந்து கொள்ளும்பொழுது, உன் வழித்தோன்றல்களுள் உன் புதல்வர்களுள்  ஒருவனை எழுப்பி அவனது அரசை நிலை நாட்டுவேன். அவன் எனக்குக் கோவில் கட்டுவான்; அவன் அரியணையை என்றென்றும் நிலைபெறச் செய்வேன். நான் அவனுக்குத் தந்தையாய் இருப்பேன்; அவன் எனக்கு மகனாய் இருப்பான். உனக்கு முன்னிருந்தவனிடமிருந்து என் பேரன்பை நான் விலக்கிக் கொண்டதுபோல அவனைவிட்டு விலக்கிக்கொள்ள மாட்டேன். மாறாக அவனை என் கோவிலின் மேலும், அரசின் மேலும் தலைவனாக என்றென்றும் நியமிப்பேன். அவன் அரியணை என்றென்றும் நிலைக்கும்.” என்று கூறினார். இவ்வாறு ஆண்டவர் எடுத்துரைத்த கருத்துக்கள் வாக்குகள் அனைத்தையும், காட்சி முழுவதையும் அப்படியே நாத்தான் தாவீதிடம் அறிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 மே 2025, 10:39